செம்மணி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானம்
யாழ், செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாள்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் இன்றைய வழக்கு விசாரணையின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.
முன்னர் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளில் 147 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் செம்மணி பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க மேலும் 8 வாரக் காலம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.