
சுவிஸ் இல் 120 நாய்கள் கருணைக் கொலை
சுவிஸ் இல் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை, அதிகாரிகள் கருணைக் கொலை செய்துள்ளனர்.
அந்த நாய்கள் சரியான உணவின்றி வாடி வந்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், வேறு வழியின்றி அவைகளைக் கருணைக் கொலை செய்ய நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அவற்றில் பல நாய்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறும் விலங்குகள் நல ஆர்வலர்கள், அவைகளைக் கொல்லும் முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
