சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

நாளை ஞாயிற்று கிழமை இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.