சீரற்ற காலநிலையிலும் துரத்தி துரத்தி வாள்வெட்டு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.