அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தின் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ சோயா 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாகும்.

ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 620 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும்.

சிவப்பு பருப்பு 6 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாய்.