சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட மர்மபொதி

மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசியெறிந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பொதி ஒன்றை மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசியெறிந்து விட்டு தப்பிச் செல்வதை அப்பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அரச புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த நபர்களை கைது செய்வதற்காக விரட்டிச் சென்ற போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் இன்னொருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பொதியை பரிசோதித்த போது அதற்குள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள், மொபைல் போன் மற்றும் அதற்கான பற்றரிகள், சிம் அட்டை, லைட்டர், சிகரெட்டுகள் என்பன பொதி செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.