சிறுத்தை தாக்குதல்: படுகாயம் அடைந்த தோட்டத் தொழிலாளி

பொகவந்தலாவ பிரதேசத்தில்  தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று புதன்கிழமை  சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதே இவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதன் போது சிறுத்தை அவருடைய முகத்தையும், கையையும் கடித்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

குறித்த சிறுத்தை காட்டுக்குள் கொண்டு சென்று விடுமாறு நல்லத்தண்ணி வனசீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்