
சாகப்போகிறேன் என கயிறோடு திரிந்த முதியவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்!
-யாழ் நிருபர்-
யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் மடப்பள்ளியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அளவெட்டி – கணேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை ஈஸ்வரன் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலய மடப்பள்ளியில் இவர் இன்று வியாழக்கிழமை காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக தான் தூக்கில் தொங்கபோவதாக கூறி கயிறு ஒன்றை தன்னுடன் வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
