
சம்மாந்துறையில் விபத்து: சம்பவ இடத்திலே உயிரிழந்த 12 வயது சிறுவன் -வீடியோ இணைப்பு-
-சம்மாந்துறை நிருபர் ஏ.பி.எம்.ஷிஹாப் ஆகில்-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
விபத்தில் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஏ.எம்.பாஸீர் (வயது – 12) என்ற மாணவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




