சனி மாற்றத்திற்கான மஹாயாக உற்சவம்

 

பிறக்கவிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனி பகவானுக்காக மஹாயாக உற்சவம் வரலாற்று சிறப்புமிக்க யாழ். உடுவில் மருதனார் மட சுந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.

சனிமாற்ற பெயர்ச்சிக்கான விஷேட  யாக, ஹோமம் வளர்க்கப்பட்டு அபிஷேசக, ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு ஸ்ரீ.செ.சுந்தரரேஷக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மஹாயாக உற்சவத்தில் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்.