
சந்தேக நபரை பிடிக்க உதவி கோரும் பொலிசார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய சாட்சியாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குற்றச் செயலுக்காக வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று AI தொழில்நுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கம் :- பொறுப்பதிகாரி, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு 071-8596408
