கையடக்க தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு : பற்றரிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி பற்றரிகளின் விலையும் அதிகரிக்கும், என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 305 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்வதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு  தடை விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் கையடக்கத் தொலைபேசி பற்றரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 23 ஆம் திகதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட, செப்டம்பர் 14 க்கு முன்னர் நாட்டை வந்தடையவுள்ள பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.