‘குப்பை கொட்டாதீர் சூனியம் வைத்துள்ளேன்’ யாழில் அறிவிப்பு!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சி படுத்தியுள்ளார்.

நாச்சிமார் கோவிலடியில் உள்ள குறித்த நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி செல்வதால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த குறித்த நபர் பொம்மை ஒன்றையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி, ” சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” என பதாகை எழுதி காட்சிப்படுத்தி உள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்