குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக விளங்கும் முள்ளம் பன்றிகள்

ரம்புக்கனை பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது.

குறித்த குடும்பம் தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டி அதன் மூலம் வரும் வருமானத்திலையே தனது குழந்தைகளுக்கான பாடசாலை செலவுகளை செய்து வருவதாக அதனை வளர்த்துவரும் குடும்பதலைவி கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது தனது கண் பார்வையிழந்த கணவரின் மருத்துவ செலவுகளையும் இதன் மூலம் பெறும் வருமானத்திலையே பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலரும் அஞ்சும் முள்ளம் பன்றிகளால் ஒரு குடும்பமே வாழ்ந்து வருகின்றமை நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக விளங்கும் முள்ளம் பன்றிகள்

குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக விளங்கும் முள்ளம் பன்றிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்