
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்தும் கற்றலுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஒத்துழைப்புடன் கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடத்தப்பட்ட பன்மைத்துவமும் உள்ளடக்கிய சேவை வழங்கல் மூலமும் அமைதியை நிலைநிறுத்துவதற்காக மேம்பட்ட கற்றல் பாட நெறியில் பங்குபற்றி சித்தியடைந்த 9 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் இந்த சான்றிதழ்களை சித்தியடைந்த பரீட்சார்த்திகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
வெளிவாரிப் பட்டப்படிப்புகள் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். ஜெயராசா தலைமையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பப் பூங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர், பல்கலைக்கழக பீடாதிபதிகள், கல்வி சார், சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தை நிலை நிறுத்தவதற்காக தேசிய சமாதானப் பேரவை அடி மட்டத்திலிருந்து அரசாளுகை மட்டம் வரை பல்வேறு சமாதான எண்ணக்கரு சார்ந்த கல்வியூட்டலைச் செய்து வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்