கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் கண்டுபிடிப்பு!
கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில், இரண்டு வெடிக்காத குண்டுகள், நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லிமீற்றர் வெடிக்காத குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
பின்னர் அவர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிசார், குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
