கிளிநொச்சியில் பயிர்களை தாக்கும் அறக்கொட்டியான் புழு
கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையானது மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பயிர்கள் 15 – 25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த காலபோக நெற்ச்செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்