கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திறுவையாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திறுவையாறு பகுதியில் வீட்டு வளாகத்தில் சூட்சுமமான முறையில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது  31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று திங்கட்கிழமை நீதி மன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.