கிளிநொச்சி விபத்து : சிகிச்சை பலனின்றி இளம் தாய் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று டிப்பர்-மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது .
விபத்தின் உயிரிழந்த குழந்தையின், தந்தை, தாய், மூத்த சகோதரியான சிறுமி ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்
இந்நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி (வயது 34) என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார்
தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்