கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு
-வவுனியா நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் பயணித்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட பொலிசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகங்க நபர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து 2.25 மில்லிகிராம் கெராயினும் 20 கிராம் கேரளா கஞ்சாவும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.