கள்ளக்காதலனோடு தனிமை: 3 வயது மகன் கொலை
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த தனது மூன்று வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து தனது ஆண் நண்பரை வீட்டுக்கு வரவழைத்த அந்த பெண் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாயை காணாமல் தேடி வந்த அவரது மூன்று வயது மகன் இதைப் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தனது மகனை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ஆனால் தவறுதலாக குழந்தை கீழே விழுந்து விட்டதாக கணவர் உள்ளிட்டவர்களை நம்ப வைத்துள்ளார்.
ஆனால் அதிலிருந்து அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. தினமும் அப்பெண்ணுக்கு கனவுகளில் இறந்து போன மகன் வந்ததால் பயந்து போன அவர் தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து கணவர் பொலிஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கைது செய்துள்ளனர்.