கறுப்பு பட்டியலுக்குள் இந்திய மருந்து
இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ‘பிரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து தொடர்பில் எழுந்த சர்ச்சைகளின் அடிப்படையில் இது ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த மருந்துக்கான கொள்வனவு கட்டணத்தை செலுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோனுக்கு பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தி தற்போது கண் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்