கத்தியால் குத்தி ரயில் திணைக்கள ஊழியர் கொலை
கல்கிஸ்ஸை இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் நேற்று செவ்வாய் கிழமை ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, பியகஹா பகுதியைச் சேர்ந்த 41 வயதான ரயில்வே குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.