கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரில் இன்று வெள்ளிக்கிழமை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கண்டி நகரில், நாளை சனிக்கிழமை முற்பகல் 9.30 முதல் மதியம் 12 மணிவரை, விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்