கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

 

கம்பஹாவில் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் வெயாங்கொடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வெயாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 1080 லீற்றர் கோடா ( 6 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News