கடற்கரையில் சடலம் கண்டெடுப்பு

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பள்ளியாவத்தை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்கு உட்பட்ட, 5 அடி 5 அங்குல உயரமும், மெலிதான உடலைக் கொண்டவர் என பொலிஸஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்