ஒரே மாவட்டத்தில் தொடர்ச்சியாக சேவைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 20 கி.மீ தூரத்திற்குள் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் 500 ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பல வருடங்களாக இடமாற்றம் இன்றி சென்றுவரும் ஆசிரியர்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி 66 பாடசாலைகளில் 512 ஆசிரியர்கள் முல்லைத்தீவு வலயத்தின் 20 கி.மீ க்கு உள்ளேயே மாறி மாறி சேவையில் உள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்பாணத்தில் இருந்து வெளிமாவட்ட சேவைக்கு முல்லைத்தீவு செல்லும் ஆசிரியர்கள் 150 கி.மீ வரை பிரயாணம் செய்யவேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

உதாரணமாக விசுவமடு, புதுக்குடியிருப்பு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி அப்பிரதேசக்களை சேர்ந்த ஆசிரியர்களை முல்லைத்தீவு நகருக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்கு பரம்பல் செய்வதன் மூலம் ஆசிரியர்களின் பிரயாண சுமையை குறைக்க முடியும்.

குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வெளிமாவட்டம் செல்லாது ஒரே மாவட்டத்தில் வருடங்களாக தங்கியிருப்போரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்