“எழுகை” நிகழ்வு திருகோணமலையில்

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்ப்பாட்டில் “திருகோணமலை மாவடத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில், “எழுகை” என்னும் பெயரில் நடத்தும் பயிற்சிப்பட்டறை நாளை காலை சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு திருகோணமலை – உப்புவௌியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளா் ச.நவநீதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உயா்கல்வி நிறுவனங்களான தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை வளாகம் ஆகியவற்றின் சிரேஸ்ட விரிவுரையாளா்களுடன், கலை இலக்கியத்துறைசாா் ஆளுமைகள் வளவாளா்களாக கலந்துகொள்ளவுள்ளனா்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட கலை, இலக்கிய மன்ற உறுப்பினா்கள் மற்றும் துறைசாா் இளம் கலைஞா்கள் 70 போ் இப்பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றவுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்