
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!
திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்போது, அண்மையில் காலமான சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்