ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்
புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில் மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கல்வி கற்பிக்கும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியரே சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தாக்கப்பட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்