அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  பசறை பதுளை வீதியில் , கோயில் கடைக்கு அருகாமையில், 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பதுளை வீதியில் கோயில் கடைக்கும், பசறை பால் சபைக்கும் இடையே, வீதி ஓரமாக குறித்த சடலம் காணப்படுவதுடன், அவ்விடத்தில் பாதணிகளும், பை ஒன்றும் , மற்றொரு பையில் 4 யோகட் கோப்பைகளும் காணப்படுகின்றன.

உயிரிழந்தவர் யாரென்று அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்