பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிய உலக வங்கி

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டிருந்ததுடன் .

அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட சுட்டெண்களில் இலங்கை 10 வரிசையில் பல்வேறு நிலைகளில் காணப்பட்டிருந்தது.

உலக வங்கியின் கூற்றுப்படிஇ குறியீட்டில் முதல் இடம் லெபனான் மற்றும் அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும்.

இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, அந்த நாடுகளில் பணவீக்கம் முறையே 128 மற்றும் 107 சதவீதம் ஆகும்.