இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.