
கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்கள் இரவு வேளையில் கடும் மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.