திருகோணமலையில் மரமொன்றின் கீழ் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து, இன்று புதன்கிழமை காலை, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, துப்பாக்கி ரவைகள் – 694, 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06 ,ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சேருநுவர பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டி.பண்டார, ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெனீப் ஆகிரும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயழிலக்க செய்வதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.