வாகன விபத்து: சாரதி படுகாயம்

-பதுளை நிருபர்-

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை  பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்தவர் முச்சக்கரவண்டியின் சாரதியே இதன்போது காயமடைந்துள்ளார்.

பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கொஸ்லாந்தையிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பேருந்து ஹாலிஎல பகுதியில் இருந்து பண்டாரவளை பக்கமாக சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேருந்தின் சாரதியை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்