யாழ் ஊர்காவற்துறை பகுதியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள நீர்தேக்கம் ஒன்றில் இருந்து இரு சிறுமிகளின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
நிரோசன் விதுசா (வயது-11) மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா (வயது-6) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இரு சிறுமிகளும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுமிகளை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள ஓடையில் அவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
கடைக்கு சென்ற இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக நீர்தேக்கத்தில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்