மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து திரிபோஷா பொதிகள் திருட்டு

அநுராதபுரம்- அங்குநொச்சிய கிராமத்தில் அமைந்துள்ள மகப்பேறு கிளினிக் நிலையத்தில் இருந்து 50 திரிபோஷா பொதிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத சிலர் கதவை உடைத்து திருடிச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு கிளினிக்கில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திரிபோஷாவே இவ்வாறு திருடு போயுள்ளது.