
55 பொதிகளில் 110 கிலோ கஞ்சா மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மாதகல் – லூர்துமாதா தேவாலயத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 110 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
55 பொதிகளாக பொதியிடப்பட்ட இந்த கஞ்சா பொதிகள் மாதகல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று தீ வைத்து எரிக்கவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
