வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை மாப்பாகலை பகுதியில் மாப்பாகலை தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது.
75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த வேளையிலேயே நேற்று சனிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் பிரேதம் பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை கிடைத்த பின்பே இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படும் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.