
ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் பாலையூற்று பகுதியில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யார் என்பதை இனங்காணவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.