சிவனொளிபாத மலையில் வைரஸால் மரணங்கள் சம்பவித்ததாக உறுதியாகவில்லை

சிவனொளிபாத மலையில் வைரஸால் மரணங்கள் சம்பவித்ததாக உறுதியாகவில்லை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலில் வைரஸ் தாக்கம் காரணமாக சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும்,  உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, இது தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமையால், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்