வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் இன்று புதன்கிழமை காலை அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..

வசந்த முதலிகே 150 நாட்களுக்கும் மேலாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல்  பன்னாட்டு மன்னிப்பு அவை) உட்பட பல சர்வதேச அமைப்புகள் வசந்த முதலியின் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என்று பலமுறை வலியுறுத்திய போதும்

எனினும் வசந்த முதலிகேவிற்கு இன்னமும் பிணை வழங்கப்படவில்லை.