16 இந்திய மீனவர்கள் கைது

16 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், நாகை பட்டனம் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் மற்றும் காரைநகர் கடற்பரப்பில் நான்கு மீனவர்ளும் கைது செய்யப்பட்டு, இவர்களுடைய இரு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க