
கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நில அதிர்வு ஏற்படலாம்
கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நில அதிர்வு ஏற்படலாம்
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இந்த வாரம் 8 மெக்னிடியுட் அளவான நில அதிர்வு ஒன்று ஏற்படவிருப்பதாக, இந்தியாவின் புவிசரிதவியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
இவ்வாறான ஒரு நில அதிர்வு அங்கு ஏற்படுமாக இருந்தால், அது இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும் பதிவாகும் என்று, இலங்கையின் புவிசரிதவியல் நிபுணரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் தெரிவித்த முக்கியமான சில விடயங்கள்:-
இலங்கை அமைந்துள்ள புவித்தகட்டின் எல்லைப் பகுதியிலேயே இந்தியாவின் இமயமலைத் தொடர் உள்ளிட்ட வடமாநிலங்கள் சில அமைந்துள்ளன.
அங்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இலங்கையிலும் உணரப்படும்.
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நில அதிர்வு இலங்கையிலும் 5 மெக்னிடியுட் அளவில் உணரப்பட்டது.
இவ்வாரம் இந்தியாவில் ஏற்படுகின்ற நில அதிர்வு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உணரப்பட்டாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் நில அதிர்வை உணரக்கூடியதாக இருக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
