துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்கமுவ வீதி இன்று சனிக்கிழமை பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த கடையில் பணியாளர் என தெரியவருகின்றது.