அம்பாறையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, போக்குவரத்து பொலிஸார் வேகத்தை கண்டறியும் கருவி மூலம் வீதியில் பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

காரைதீவு சம்மாந்துறை போன்ற பகுதிகளில் இந்நடவடிக்கையை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கனரக வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் என ஒவ்வொரு வாகனங்களிற்கும் தனிப்பிட்ட வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.