சீனா இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்க தீர்மானம்

 

சீனாவின் சவுத் மோர்னிங் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையின்படி இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 5000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடன், முக்கிய பிராந்தியங்களில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய கிழக்கு, பசிபிக் தீவுகள் மற்றும் மத்திய ஆசியா போன்ற பிராந்தியங்களில் அதன் பலதரப்பு மற்றும் இருதரப்பு பாதுகாப்பு பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு சீனா பயிற்சி அளித்து வந்தது.

இந்தநிலையில் அடுத்து ஐந்து ஆண்டுகளில் இலங்கை, ஈரான், பெலாரஸ் மற்றும் ஆர்மீனியா, மங்கோலியா, அஜர்பைஜான், நேபாளம் கம்போடியா, மற்றும் துருக்கி ஆகிய ஆறு நாடுகளின் பொலிஸார்க்கு பயிற்சியளிக்க சீனா திட்டம் வகுத்துள்ளதாக சீனாவின் சவுத் மோர்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்