உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்த இளைஞன்

இந்தியாவில் – ஐதராபாத்தில் போவன்பல்லியில் வசித்து வந்த 24 வயதுடைய விஷால், ஆசிப் நகரில் உள்ள பொலிஸ்  நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

பெப்ரவரி 23 அன்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்துள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில் விஷால் புஷ்-அப்ஸ் மற்றும் ஸ்ட்ரெச் செய்த பிறகு கடுமையாக இருமிகொண்டு தரையில் விழுந்துவிட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விஷால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விஷால் மாரடைப்பு காரணமாக இறந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

70 வயதுக்கு பிறகு வரக்கூடிய மாரடைப்பு தற்போது, இளம் தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.