வெளிநாட்டு சுற்றுலா பயணியை பாதணியால் தாக்கியவருக்கு விளக்கமறியல்
மலைநாட்டு ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர், இன்று வெள்ளிக்கிழமை பண்டாரவளை பதில் நீதிவான் ன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை, தண்டவாளத்துக்கு அப்பால் நின்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸார் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.